சென்னை: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் இரண்டு நாள் துங்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்துன்று காலமனாக வாடிகன் அறிபிப்பு வெளியிட்டது.
மறைந்த போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த போப்பின் கல்லறை, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமைக்க அவர் விரும்பாத நிலையில், அவரது உடல், ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதை போப் பிரான்சிஸ் ரோமுக்கு செல்லும்போதெல்லாம் கூறியதாகவும், அவர் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்ததாகவும் வாடிகன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, போப் உடல் முதல்முறையாக வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ளத. அதாவது, 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் பிரான்சிஸ் என்ற பெருமையை பெறுகிறார்.
இந்த நிலையில், போப்பிரான்சிஸ் மறைவுக்கு இந்திய அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.