சென்னை: 2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8ந்தேதி) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடக்க விழா ஆலந்தூரில் இன்று நடைபெறுகிறது. இதன்மூலம் பயனர்களுக்கு, ரூ.3000 பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் மாவட்டங்களில் தொடங்கி வைக்கின்றனர்.
இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ளது. நாளை முதல் ( 9ந்தேதி முதல்) பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் உள்ள குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]