சென்னை: தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 8ந்தேதி) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெற உள்ளது.
நடப்பாண்டு ரேசன் அடைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் 3 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களை கவரும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப்பணமும் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. இதன்மூலம் பயனர்களுக்கு, ரூ.3000 பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் அவர்களின் மாவட்டங்களில் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் ரேசன் கடைகளில், வரும் 9ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு என ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக ரேசன் கடைகள் விடுமுறை இன்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பங்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் நேரத்தின்போது, ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது டோக்கனில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]