சென்னை

ப்ரல் 10 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 

வரும் 10 ஆம்  தேதி அன்று உலகெங்கும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது

தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 10 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள், ஏப்ரல் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.