சென்னை:

க்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன்,  சினிமாவில் மட்டு மல்லாது அரசியலிலும் நான் ரஜினியுடன் வேறுபடுகிறேன் என்றும், அரசியல் எங்களை பிளவு படுத்தும் என்றும் கூறினார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகர் கமலஹாசன், நெறியாளரின் கேள்விக்கு,  சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் எனக்கும் ரஜினிகாந்திற்கும் இடையில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில் ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறி வருகிறார். ஆனால், நான் மதங்களை பார்ப்பது கிடையாது. அனைத்து மதங்களை நான் சமமாக மதிக்கிறேன் என்றார்.

திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல், தற்போது  அரசியலிலும் வேறுபடுகிறேன் என்ற கமல், ரஜினி பல விஷயங்களில்  கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]