காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழா பேனரில் கவர்ச்சி நடிகை மியா காலிபா படம் இடம் பெற்றிருந்ததால் காவல்துறையினர் பேனரை அகற்றியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மனுக்கும் ஊர் மக்கள் ஆடி மாதத்தின்போது பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கமாகும்.

தற்போது அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு வைபோக விழாவை முன்னிட்டு திருவிழா பேனர்கள் ஊரை அலங்கரித்து வருகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் புகைப்படங்களையும், திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் பேனர்களில் வைத்து அழகு பார்த்துள்ளனர்.

, கோவில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் ஒன்றில், பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. குறிப்பாக மியா கலிபா பால்குடம் தூக்குவது போல் சித்தரித்து அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு தரப்பினரிடம் இருந்து பேனருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மற்றொரு தரப்பினர் கோவில் திருவிழா சார்ந்த பேனரில் கவர்ச்சி நடிகையின் புகைப்படம் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு நேரில் சென்று அந்த பேனரை அங்கிருந்து அகற்றி உள்ளனர்.