சென்னை

காவல்துறையினர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 50க்கும் மேற்பட்டோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் உறங்கக்கூடாது என கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி தங்கிய தங்களை பேருந்து நிலையத்தின் உள்ளே தங்கக்கூடாது எனக்கூறி காவல்துறையினர் தாக்கி துரத்தியதாக தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பேச்சு வார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.