சென்னை

மிழகத்தில் உள்ள 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர்கள் வீடுகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்ற்னர்.. காவல்துறையினர்  இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்தி இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இந்த பாதுகாப்பு அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.  தற்போது தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய மூவரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மூவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.