டெல்லி

பிரதமர் மோடி இன்று அதிகாலை ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ரஷியா சென்றார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும்  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கசான் நகருக்கு சென்றிருந்தனர். புதின் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அனைத்து தலைவர்களுக்கும் விருந்து அளித்தார். நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இத்வே கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் முதலாவது முன்கூட்டியே திட்டமிட்ட சந்திப்பு ஆகும்.

மோடி இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் முறையாக கையாள வேண்டும் என்றும், அவை அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யானையும் மோடி நேரில் சந்தித்து பேசினார். பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவு பெற்ற நிலையில்,பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷியாவில் இருந்து டெல்லி புறப்பட்டார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை. விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.