டெல்லி
பிரதமர் மோடி ரிசர்வ் வங்கியை பாராட்டி உள்ளார்/
இந்திய ரிசர்வ் வங்கி லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி எக்ஸ் தளத்தில்,
‘இந்திய ரிசர்வ் வங்கிக்குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் காகித பயன்பாட்டைக் குறைத்து, ரிசர்வ் வங்கியின் உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை மாற்றியிருப்பதை விருது குழு பாராட்டி உள்ளது’
எனப் பதிவிட்டிருந்தது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,
‘நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பாராட்டத்தக்க சாதனை. டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துகின்றன’
என்று பாராட்டி உள்ளார்.