பெய்ஜிங் :  பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார்.  அவரது இந்திய பயணம், ஜப்பான்  மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி 8வது முறையாக தற்போது மீண்டும்  ஜப்பான் செல்வது அவரது

சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி  மாநாடு ஆகஸ்டு ம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.   சீன அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்பட 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  உள்பட பல நாடுகளில் தலைவர்கள் சீனா செல்கின்றனர்.

இதையொட்டி பிரதமர் 4 நாள் அரசுமுறைப் பயணமாக,  ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு‘ செல்கிறார். அவரது பயணம் நாளை (ஆக. 29) முதல் தொடங்கு கிறது. முதலில்  ஜப்பான்  செல்லும் பிரதமர், அங்க  15-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கிறார். ஆக. 29, 30 ஆகிய தேதிகளில்  ஜப்பானல் முகாமிடும் பிரதமர் அங்கு  ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்து உரையாடுகிறார்.

தொடங்கு அங்கு நடைபெறும் பேச்சுவாா்த்தையில் பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறாா். மேலும், கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையே பல துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவா்கள் மறுஆய்வு செய்வாா்கள் என்றும், முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வாா்கள் என்றும் வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்தாா்.

பிரதமரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கு இடையே புதிய ஒத்துழைப்புக்கான வழிகளைத் திறக்கும் என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டாா். து: இந்த வருடாந்திர மாநாட்டின் ஒரு பகுதியாக, தலைநகா் டோக்கியோ தவிர மற்றொரு நகருக்கும் சென்று ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமா் மோடி தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொள்வாா். இரு தலைவா்களும் விரிவான உரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பை இது வழங்கும். இந்தியா மற்றும் ஜப்பான், ஆசியாவின் இரண்டு முன்னணி ஜனநாயக நாடுகள் மற்றும் உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் உள்ளவை.  இரு நாடுகளும் பல விஷயங்களில் மதிப்புகள், நம்பிக்கை, வியூகங்களைப் பகிா்ந்து கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடா்ந்து விரிவடைந்துள்ளன என்றாா்.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி, அடுத்து சீனா செல்கிறார். அங்கு நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதுடன், அங்கு ரஷியஅதிபர் புதின், சீன அதிபர் உடன் உரையாட உள்ளதாகவும், அப்போது அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவ்லகள் தெரிவிக்கின்றன.