https://twitter.com/RakeshB36568801/status/1233635032058585093

அகமதாபாத் – ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் 30 நிமிடங்கள் தாமதமானது.

அந்த விமானம் புறப்பட தயாராக இருந்த சமயத்தில் புறா ஒன்று உள்ளே நுழைந்துள்ளது.

சிலமணி நேரம் கழித்து அந்த புறா வெளியேறியதும் விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தினுள் புறா வந்தது எப்படி என்பதற்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை.

தற்போது இந்த வீடியோ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.