சென்னை:
பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை  மெரினா உட்படச் சென்னை கடற்கரைகளுக்குச் செல்ல கடந்த 2-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்துக் கடந்த 27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும்,  இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடற்கரைகளில் கூட்டம் கூடக் கூடாது, முகக்கவசம் அணிந்து விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.