சென்னை:  பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய முனையமாக மாற்றும் இந்தியன் ரயில்வே, பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை மேலும் 2 புதிய ரயில் பாதை அமைக்க  திட்டமிட்டு உள்ளது.   அதன்படி புதிய பாதையாக 5வது மற்றும் 6வது ரயில் பாதை அமைக்க மத்திய  ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  அத்துடன், பெரம்​பூர் – அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்​க​வும், ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் ஆகிய ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரும் நிலை​யில், கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை புதிய ரயில் முனைய​மாக மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான அறி​விப்பை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறி​வித்​திருந்​தார். இதற்​காக, தெற்கு ரயில்​வே​யில் நிர்​வாக தரப்​பில் ஒப்​புதல் பெறப்​பட்​டு, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி​யில் 4-வது முனைய​மாக மாற்​ற, ரயில்வே வாரி​யத்​துக்கு கடந்த சில மாதங்​களுக்கு முன்பு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதுத​விர,பெரம்​பூர் – அம்​பத்​துார் இடையே 6.4 கி.மீ., துாரத்​துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபா​யில் அமைக்​க​வும் பரிந்​துரை செய்​யப்​பட்​டது.

இந்த ​நிலை​யில், பெரம்​பூரை 4-வது புதிய முனைய​மாக மாற்​ற​வும், கூடு​தலாக 5, 6-வது பாதைகள் அமைக்​க​வும் ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்ட்​ரல் ரயில் நிலை​யத்தில் இடநெருக்​கடி ஏற்​படு​வ​தால், பயணி​கள் தேவைக்கு ஏற்ப கூடு​தல் முனை​யங்​கள் தேவைப்​படு​கின்​றன. அந்த வகை​யில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் வழித்​தடத்​தில், பெரம்​பூர் ரயில் நிலை​யம் முக்​கிய​மான​தாக இருக்​கிறது. 80-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள், 150-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​கள் இந்த ரயில் நிலை​யம் வழி​யாக இயக்​கப்​படு​கின்​றன. எனவே, பயணி​களுக்​கான அடிப்​படை வசதி​யுடன் கூடிய, மேம்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

பெரம்​பூரில் போதிய நிலம் இருப்​ப​தால், இங்கு ரூ.360 கோடி​யில் 4-வது புதிய முனை​யம் அமைப்​ப​தற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்​பப்​பட்​டது. ரயில் நிலை​யத்​தின் கூடு​தல் வசதி​களுக்​கான அமை​விடங்​கள், பார்​சல் அலு​வல​கங்​கள், வாகன நிறுத்​த வசதி, வணிக வளாக பகு​தி​கள், சுற்​றுச் சுவர்​கள், மேம்​படுத்​தப்​படும் நுழை​வா​யில்​கள் உள்​ளிட்ட விவரங்​கள் இணைத்து அனுப்​பப்​பட்​டது. தற்​போது, இந்த அறிக்​கைக்கு ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி(தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் சென்னை எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது, அதை 3வது முனையமாகவே தற்போது மாற்றிவிட்டது. இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மேற்கு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் தாம்பரம் போல் இடவசதி உள்ள ரயில் நிலையங்கள் இல்லை.. தற்போதைய நிலையில் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள ரயில் நிலையமாக அரக்கோணம் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னையில் பெரம்பூரை ஒட்டிய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே யோசித்து வந்தது.  தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிற்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்து வந்தது.

இந்த நிலையில்  பெரம்பூர் லோகா,  வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வேக்கு சொந்தமான ஏராளமான  இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்கலாம் என்று தெற்கு ரயில்வே யோசித்தது. ஆனால் அதனை ரத்து செய்த தெற்கு ரயில்வே சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே​போல, இங்கிருந்து ரயில்​கள் இயக்க வசதி​யாக, பெரம்​பூர் – அம்​பத்​துார் இடையே 5,6-வது புதிய பாதைகள் அமைக்க ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்த புதிய பாதைகள் அமை​யும்​போது, அம்​பத்​துாரில் இருந்து பெரம்​பூருக்கு தடை​யின்றி ரயில்​களை இயக்க முடி​யும்.

பெரம்​பூரில் தற்​போது, நான்கு நடைமேடைகள் உள்​ளன. கூடு​தலாக இரண்டு நடை மேடைகள் அமைக்​கப்​படும். மேற்​கண்ட பணிகளுக்கு விரை​வில் ஒப்​பந்​தப்​புள்ளி வெளி​யிடப்பட உள்​ளது. வரும் 2028-ல் இந்த புதி​ய முனை​யம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்​டு வர திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.