சென்னை:
அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள், மாணவ சமுதாயம் பதிலடி தருவார்கள் என்றும், நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் நுழையவில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி வரும் ஓபிஎஸ் மக்களை ஏமாற்ற துடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel