ஏதென்ஸ்
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நாடு பாலகன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது கிரீஸ் நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. இந்த நகரம் அட்டிக் சமவெளியில் அமைந்துள்ளது. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது.
ஏதென்ஸ் நகரம் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளியாக விளங்கும் நகரமாகும் இந்நகரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நவீன ஒலிம்பிக் போட்டியின் தாயகமாக விளங்கும் கிரீஸ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்களும், பண்டைய காலக் கட்டடங்களும் உள்ளது. வெளிநாட்டினர் விரும்பி சுற்றுலா செல்லும் நகரமாக உள்ள ஏதென்ஸ் உள்ளது.
இந்த நகரில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் நேற்று ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிர்ச்சியடைந்தனர். ஏதென்ஸ் நகரம் இவ்வாற் செவ்வாய்க் கிரகத்தைக் காண்பது போலக் காட்சியளிக்க என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது.
அதன்படி
“வட ஆப்பிரிக்காவில் இருந்து மேகக் கூட்டங்கள் இந்தக் காலக்கட்டத்தில் கிரீஸ், மாசிடோனியா, சிப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்வது இயற்கையான ஒன்று தான். இந்த மேகக் கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் புழுதிப் புயல் தாக்கியுள்ளது. எனவே ஏதென்ஸ் நகர ஆரஞ்சு நிறத்தில் தெரிகிறது’
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.