சாரா

மும்பை  அருகே ஒடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் கழன்று  ஓடியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாடில் இருந்து மும்பைக்கு நேற்று அதிகாலை 6.02 மணிக்கு 22 பெட்டிகளுடன் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நேற்று காலை 8.36 மணிக்கு இந்த ரயில் மும்பை அருகே உள்ள கசாரா ரயில் நிலையம் வந்தடைந்து அங்கு இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் இருந்து 4 மற்றும் 5-வது பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கழன்றது.

எனவே என்ஜினுடன் முதல் 4 பெட்டிகள் மட்டும் சென்றன. என்ஜின் ஓட்டுநர் பெட்டிகள் கழன்று ஓடியதை கவனித்து ரயிலை நிறுத்தினார். இதனால் தனியாக கழன்று ஓடிய பெட்டிகள், முன்னாள் சென்ற என்ஜின், பெட்டிகள் மீது மோதாமல் சிறிது தூரத்தில் நின்றது. ரயில் பெட்டிகள் கழன்றதல் அங்கிருந்த மக்கள் பீதி டைந்தனர். இந்த விபத்தின் போது ரயில் குறைந்த வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்படு பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

த்கவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முன்னாள் சென்ற என்ஜின் மற்றும் பெட்டிகள் பின்னோக்கி கொண்டு வரப்பட்டு கழன்ற 4, 5-வது பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைத்தனர். பிறகு அங்கு இருந்து ரயில் புறப்பட்டது. ரயில் பெட்டிகள் கழன்ற சம்பவத்தால் மன்மாட் – மும்பை சி.எஸ்.எம்.டி. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக அங்கு இருந்து புறப்பட்டது. \

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.