சென்னை; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்,  பருவகால நோய்களான நிமோனியா, வயிற்றுப்போக்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் வயிற்றுபோக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் வாக்கிங் நிமோனியா என ஜுரம் காரணமாகவும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அரசு, தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக்கால நோய்கள் குறித்த பொதுமக்கள், அச்சப்பட தேவையில்லை என்றும்,  மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. அதுபோல சென்னையில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறத. இதுபோன்ற நோய்கள் மழைக்கால நோய்கள், இந்த  நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது என்றார்.

மேலும்,   வழக்கம் போல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கி முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் வழக்கமான நோய் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் நல பிரச்சினை களால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளால் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இ-கோலி எனப்படும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஹ

அதுபோல,  மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என்று மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா, கிளாடிமியா நிமோனியா, லெஜியோனல்லா வகை பாக்டீரியாக்கள்தான் காய்ச்சலை உருவாக்குகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் வழியே இந்த வகை பாக்டீரியாக்கள் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் ஆபத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தும். சிறியவர்களை தாக்கினால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஆபத்து குறைவு என்கிறார்கள்.

இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்த பொது சுகாதாரத் துறையினரின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இதனால்,  இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்