சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரையிலான 19 கி.மீ. நீள சாலையில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்ல தடைவிதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.