தொழிநுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப். 2ம் தேதி காலை 6 மணிவரை நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைப்பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் மற்றும் அனைத்து MEA/RPO/BOI/ISP/DoP/Police அதிகாரிகளுக்கும் இந்த சேவை முடக்கம் பொருந்தும் என்று அதன் இணையதளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..

பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆகியவற்றில் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிக்க, ஆக., 30ல் நேர்காணலுக்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அடுத்த வேலை நாளில் நேர்காணலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.