டெல்லி: வஃபு வாரிய சட்ட மசோதா 14 திருத்தங்களுடன்  நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்துள்ளது. இந்த மசோதா குறித்து  எதிர்க்கட்சி கள் கூறிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

வஃபு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த மசோதாவை மக்களவையில், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி,  புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு அதன்படி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான  கூட்டுக்குழு  ஆய்வு செய்தது. இந்த கூட்டுக்குழு  உறுப்பினர்கள் இந்த மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.  கடந்த 24ந்தேதி, 25ந்தேதி இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மோதல் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை கூட்டுக்குழு இடைநீக்கம் செய்து அறிவித்தத. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதுகுறித்து  கூறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால், வஃபு மசோதா குறித்து 6 மாதங்களாக நடந்த விரிவான விவாதங்கள் நடைபெற்றது. அதுகுறித்து அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் திருத்தங்களை கேட்டிருந்தோம். அதன்படி, “மொத்தம் 44 திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 27ந்தேதி) நடைபெற்ற   இறுதி ஆலோசனைக்   கூட்டத்தில், 14 திருத்தங்கள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகளும் திருத்தங்களை பரிந்துரைத்தன. ஒவ்வொன்றும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன” என்றார்.

இதையடுத்து, திருத்தி அமைக்கப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த  கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பரிந்துரைத்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதுடன்,  ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்த 14 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆலோசனையின்போது தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.