டெல்லி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் டி சர்ட் அணிந்து வததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்ததால், அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டு கொண்டார். இதையொட்டி நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை இதேபோன்று நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அவையில் தான்பார்த்த விசயங்களை பற்றி பேச வேண்டும் என கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தபோதும் அவர், என்ன விசயங்களை பார்த்துள்ளார் என்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.

மக்களவை மீண்டும் கூடியதும், வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 2 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்  தி.மு.க. எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்த வாசகங்களுடன் வந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்களில் அமளியில் ஈடுபட்டனர். எனவே மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.