பாரிஸ்: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்  திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படஉள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னிடம் இனி போராட சக்தியில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார் வினேஷ் போகத். “நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது… என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன… இனிமேலும் போராட வலுவில்லை என்னிடம்… மல்யுத்தத்திலிருந்து(2001 – 2024) விடைபெறுகிறேன். மன்னிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,   தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து  வினேஷ் போகத் சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளள்ளார். அதில்,  தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக  இன்று (வியாழக்கிழமை)  காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்படவுள்ளது. முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். பின்னர், தனக்கு , கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளாா்.

இந்த மேல்முறையீடு வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட  உள்ளது.