கேப்டவுன்: 19 வயதினருக்கான ஜூனியர் உலகக்கோப்பைத் தொடர் அரையிறுதியில் மோதுகின்றன இந்தியா – பாகிஸ்தான் அணிகள்.

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், மற்றொரு பிரிவு காலிறுதியில் மோதின பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள்.

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியில் யாரும் அரைசதம்கூட எடுக்காத நிலையில், 49.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஆப்கன் அணி எடுத்த ரன்களோ வெறும் 189 ரன்கள் மட்டுமே.

ஆனால், இந்த எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, வெற்றிபெற 41.1 ஓவர்கள் தேவைப்பட்டன. 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 190 ரன்களை எடுத்து வென்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

பாக்., அணியின் முகமது ஹுரைரா, அதிகபட்சமாக 64 ரன்களை அடித்தார். அரையிறுதியில், வலுவான இந்தியாவை சந்திக்கிறது பாகிஸ்தான்.