ஸ்லாம்பாத்

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும்  தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

நேற்று ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LcT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்

“பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்.

இது அனைத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில் இந்த அணைத்து இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன.

இந்துத்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன”

என்று தெரிவித்துள்ளார்.