பத்மபூஷன் விருது பெற்று திரும்பிய நடிகர் அஜித்துக்கு விமான நிலையத்தில் காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பத்மபூஷன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித் குமார் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது.

இருந்தபோதும் அதை அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் அஜித் திடீரென ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி அஜித் தரப்பினர், அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.