திருநெல்வேலி

ராமரிப்பு பணி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஆகவே அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலும் வருகிற 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது

இந்த தகவலை தெரிவித்த ரயில்வே நிர்வாகம் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.