Skip to content
  • Fri. Sep 4th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆஸ்திரியா நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்…

Mar 8, 2021

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட  நபர் ஒருவர் திடீரென உயரிழந்ததைத் தொடர்ந்து,  தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FILE PHOTO: Vials with a sticker reading, “COVID-19 / Coronavirus vaccine / Injection only” and a medical syringe are seen in front of a displayed AstraZeneca logo in this illustration taken October 31, 2020. REUTERS/Dado Ruvic/File Photo

உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், இங்கிலாந்தில் உள்ள  ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் செயல்பாடு நல்ல பலனை கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.  இந்த தடுப்பூசியானது, இந்தியாவிலும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,   கோவிட் -19 தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்த உலக சுகாதார நிறுவனம்,  அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியது. இதன் காரணமாக  இந்த தடுப்பூசி  உலகின் ஏழ்மையான சில நாடுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்,  ஆஸ்திரியா நாட்டுக்கு அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  அங்கு ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில்,  சுமார் 49 வயது பெண் ஒருவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான உடற்கூறாய்வில், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தம் கடுமையாக உறைந்து, அதன் விளைவாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் ஒருவரும்,   ரத்தம் உறைதல் அதிகரித்து நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாடு அறிவித்து உள்ளது.

 

Post navigation

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…
தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது

Related Post

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

உலகம்

உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar
உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer