‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்தார். கடந்த வார மோதலின் போது பாகிஸ்தான் இராணுவம் இந்த விமானப்படை தளத்தை குறிவைத்தது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற அவர், கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.
இதையடுத்து பூஜ் விமானப்படை தளத்திற்கு இன்று சென்ற ராஜ்நாத் சிங் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டினார்.
Patrikai.com official YouTube Channel