தராபாத்

ந்திரசேகர் ராவ் கட்சியான பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தெலுங்கானா மாஅநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் குமார் நேற்று அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசில் இணைந்தார். இததனால் பி.ஆர்.எஸ். கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சஞ்சய் குமார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவரமும், முதல்வருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் குமார் காங்கிரசில் இணைந்தார்.

சஞ்சய் குமார் தொழில் ரீதியாக மருத்துவ ர் ஆவார் இவர், 2வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் இவர் காங்கிரசில் இணைந்த 5வது பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். இவர்களை தவிர ஐதராபாத் மேயர் விஜய லட்சுமி ஆர். கட்வால் உள்பட பல பி.ஆர்.எஸ். தலைவர்களும் காங்கிரசில் இணைந்துள்ளனர்.