சாத்தூர்
சாத்த்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இன்று பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடி விபத்தால் ஒரு மணி நேரமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறி பட்டாசு ஆலையில் சுமார் 50 அறைகள் உள்ள நிலையில் இதுவரை 15 அறைகள் சேதமடைந்துள்ளன. பக்கத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவிய நிலையில் அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறுகின்றன. வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதனைக் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.