புவனேஸ்வர்

டிசா மாநில முதல்வர் அம்மாநிலத்தில் டானா புயலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்று இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. நேற்று காலை இப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

தீவிர புயலாக உருவெடுத்த இந்த புயல் வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. டானா புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

இன்று காலையில் ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி ஆய்வு செய்த பின்னர்,

”ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜெகநாதரின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும், அரசு மனித உயிர்களை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், சாலைகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்திருப்பதும் கூட இன்று பிற்பகலுக்குள் அகற்றப்படும்.  ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இன்று மாலை 6 மணிக்குள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டம் உட்பட அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.”

என அறிவித்துள்ளார்.