சென்னை: பெண்கள்  குறித்த பொதுமேடையில் ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக  வரும்  16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போனவர் அமைச்சர் பொன்முடி. அவரது வாய்கொழுப்பால் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளார்.  பெண்கள் குறித்து பேசிய எஸ்வி.சேகர் நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்துகொண்டிருக்கையில், பல முறை பெண்கள் குறித்து அபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியயுள்ள அமைச்சர் பொன்முடி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது திமுக அரசின் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த  பெரியார் தின பொதுக்கூட்டத்தில் பேசும்போது,   பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. .அதில் பொன்முடிய பேசிய கருத்துக்கள், அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.

அவரது அருவறுக்கத்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரை கண்டிப்பதாக கனிமொழி எம்.பி. அறிக்கை கொடுத்தார். இருந்தாலும் அவர்மீது பெண்கள் கடுமையாக வசை பாடிய நிலையில், அவர்து கட்சி பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்மீது காவல்துறை வழக்கு பதிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால்,  இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது.

இந்தநிலையில்,  பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெண்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! 16.4.2025 – புதன் கிழமை காலை 10 மணிக்கு. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்