டெல்லி

ரிசர்வ் வங்கி தற்போது ரூ. 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்ப் நடவடிக்கையால் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.  அவற்றுக்கு பதில் புதிய வடிவில் ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டுக்கள் விநியோகம் செய்யபட்டன.

இந்நிலையில்  ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்து அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அப்போது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 30-ந் தேதி நிலவரப்படி, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன.

ரிசர்வ் வங்கி,

”தற்போது ரூ.7 ஆயிரத்து 261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளன. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம்”

என்றும் தெரிவித்துள்ளது