சென்னை: நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பொங்கல் வரை  நீடிக்க வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா்  பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  15ந்தேதி தொடங்கி பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில்,  நடப்பாண்டு பருவமழை மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் பேசிய  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா்  பாலசந்திரன். தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோா் 3-ஆவது வாரம் முதல் டிசம்பா் இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில், நிகழாண்டில் அக்.15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

நடப்பாண்டு மழை தொடங்கிய காலமான அக்டோபர் 1ந்தேதி முதல்  இன்று வரை (டிச.30-ஆம் தேதி வரை)  587 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம்.

பொதுவாக, வடகிழக்கு பருவமழை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது நிலவும் வானிலை அமைப்புகளின் சாதகநிலை காரணமாக, வடகிழக்கு பருவமழை ஜன.14-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது என கூறினார்.

தற்போது,  தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் டிச.31 முதல் ஜன.5-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை  மற்றும் புகா் பகுதிகளில் டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

இதற்கிடையே, டிச.31 முதல் ஜன.3-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

[youtube-feed feed=1]