சியோல்

மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.  தங்களுக்கு எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா இணைந்து கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இந்த கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இன்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அப்போது வடகொரியாவின் ஜங்யாங் நகரில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி 10 நிமிட இடைவெளியில் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டது.

இதில் முதல் ஏவுகணை கடலில் விழந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை வடகொரிய நிலப்பரப்பிற்குள்ளேயே விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே வடகொரியா கடந்த 26ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் 10 நாட்களுக்குள் 2வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் கொரீய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.