வாஷிங்டன்

ட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

அமெரிக்காவுக்குள் கனடா எல்லை வழியே சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது,