டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை  நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளின் எல்லா வரிசைகளும் பாஸ்டேக் வரிசைகளாக மாற்றப்பட உள்ளன.

பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஜனவரி 1ம் தேதி முதல் வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

[youtube-feed feed=1]