டெல்லி

பாஜக தனது அக்னிவீர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க.மட்டும்  240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இம்முறை மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.என்பதால் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் உதவி தேவைப்படுகிறது.

கடந்த முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் 2022ம் ஆண்டு ராணுவ வீரர்கள் தொடர்பான அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 4 வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். பிறகு 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்படையில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். பாஜக அரசு இதன் மூலம் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும் என எண்ணியது.

திட்டத்துக்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இத்திட்டத்தால் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய ஜனதா தளம் நினைக்கிறது.எனவே இளைஞர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை சமாதானம் செய்யும் வகையில், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

நிதிஷ்குமாரி ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி

“அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது. நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது”

என்று கூறியுள்ளார்.