சென்னை: தமிழ்நாட்டில், தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசுப் பணிகளுக்கு தகுதியானவை என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளியின் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ் அரசு பணி, பதவி உயர்வுக்கு உகந்தல்ல என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை  கடந்த பிப்ரவரி மாதம் 6ந்தி அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவை” என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வினை எழுத முடியும். மேலும், இந்த படிப்பு சிபிஎஸ்இ-க்கு இணையானது என தேசிய திறந்த நிலை பள்ளி அறிவித்து செயல்படுத்தி வந்தது.

இங்கு படித்து தேர்வு எழுதி வாங்கும் சான்றிதழ் தமிழ்நாட்டின் செல்லுபடியாகது என திமுக அரசு அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அவை செல்லு படியாகும் என கூறி உள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக்கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படு கிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில்,  தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம்,  இந்த நிலையில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்ததற்கு சமமானது என சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டது. விளம்பரம் அந்த மனுவின் அடிப்படையிலும், உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், உயர்கல்வி மன்ற கூட்டத்தின் முடிவின் படி, திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்து 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெறுபவர்களின் கல்வி தகுதியை தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. மேலும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்விற்கு அனுமதிக்க முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.