டெல்லி:  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக  மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை என்ற மாநாடு நடைபெற்றது. இதில்,  மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்  கலந்துகொண்ட சிறப்புரை ஆற்றினார். அப்போது, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டங்களுக்கு மாற்றாக  மத்திய அரசு மூன்று புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி,  பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாமற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம்ஆகிய மூன்று சட்டங்களும் கடந்தஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கான அனுப்பப்பட்ட நிலையில், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து தேர்தல் காரணமாக இந்த சட்டம் அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது,

இந்த சட்டங்களை அமல்படுத்த தேவையான பயிற்சியை போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அளித்து வருகிறது. நீதித் துறை அகாடமி, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களும் அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையை கணக்கில் கொள்ளும்போது, இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளன அதை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,.

இந்த 3 புதிய சட்டங்களும்  ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளன. மத்தியில் உருவாகியுள்ள கூட்டணி மிகவும் வலிமையான அரசு என்பதால் பொது சிவில் சட்டமும் அமல் படுத்தப்படும் என்று சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.