மும்பை:
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து என்.சி.பி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவிக்கையில், ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் பவாரின் பித்தப்பையில் பிரச்சினை இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதற்காக அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர் என்று கூறினார்.
அவரது வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததை அடுத்து சரத்பவார் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரது பித்தப்பையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை கண்டறிந்து, மார்ச் 31 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர் என்றும் நவாப் மைக் கூறினார்.
[youtube-feed feed=1]