டெல்லி

தேசிய மகளிர் ஆணையம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த கவிஞர் இனியனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறித்து திமுகவை சேர்ந்த கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்

நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாதது குறித்தும், மத்திய நிதி மந்திரியாக தொடர்வது குறித்தும், தமிழ்நாடு எம்.பிக்களிடம் கேள்வி எழுப்புவது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக வந்த புகாரை பதிவு செய்துகொண்ட தேசிய மகளிர் ஆணையம், கவிஞர் இனியவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கவிஞர் இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.