கொல்கத்தா: நர்மதா அணை தொடர்பான அவதூறு வழக்கில், பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 23ஆண்டுகளுக்கு பிறகு 5  மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, டெல்லி துணைநிலை ஆளுநராக இருக்கும்,  வினய் குமார் சக்சேனா 2021ம் ஆண்டு  தாக்கல் செய்த 23 ஆண்டுகால கிரிமினல் அவதூறு வழக்கில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு உத்தரவிடப்பட்டது.

ர்மதா ஆற்றின் மீது அணை கட்டுவதை எதிர்த்த பட்கரின் நர்மதா பச்சாவோ அந்தோலனுக்கு எதிராக 2000-ம் ஆண்டில் சக்சேனா ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். இதையடுத்து, சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கர் ‘பத்திரிக்கை நோட்டீஸ்’ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  2001-ம் ஆண்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

தற்போது டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவால் 2001-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் மே 24-ம் தேதி தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கி டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சர்மா,  மேதா பட்கர், வி.கே. சக்சேனாவை அவதூறு செய்ய தெளிவான நோக்கத்தைக் கொண்டிருந்தார் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவர் குஜராத் அரசின் ஏஜென்ட் என்று அழைக்கப்பட்டதையும் குறிப்பிட்டது.  மேலும்,  புகார் கொடுத்தவரை ‘கோழை’ என்றும் ‘தேசபக்தர் அல்ல’ என்றும் முத்திரை குத்த அவர் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட குணம் மற்றும் தேசத்தின் மீதான விசுவாசத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

தேசபக்தி மிகவும் மதிக்கப்படும் பொது வாழ்க்கையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் குறிப்பாக கடுமையானவை. மேலும், ஒருவரின் தைரியம் மற்றும் தேசிய விசுவாசத்தை கேள்வி கேட்பது அவர்களின் பொது பிம்பத்திற்கும் சமூக நிலைப்பாட்டிற்கும் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.”

மேதா பட்கர், வினய் குமார் சக்சேனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், அவர் அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டார் என்றும் அதன் மூலம் அவரை பொது நம்பிக்கை மற்றும் நலன்களுக்கு துரோகியாக சித்தரிக்கிறார் என்றும் பரிந்துரைத்தது.

மேதா பட்கரின் கருத்துகளை நீதிமன்றம் எரிச்சலூட்டுவதாகக் கூறியது. இந்த கருத்துக்கள் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் மற்றும் பொதுமக்களின் பார்வையில் சக்சேனாவின் புகழைக் குறைக்கும் நோக்கத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு மேல்முறையிட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.