5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை நகரின் தன்வந்தரி சாலையில் உள்ள ‘சாய்ராம் எலக்ட்ரானிக் வெய்பிரிட்ஜில்’ நடைபெற்றது.

‘பீமா’ யானை 5465 கிலோவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்போ சவாரியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த யானை 2022 தசராவின் போது சுமார் 4,000 கிலோ எடையுடன் இருந்தது.

25 வயது இளம் யானையான பீமா 5.5 டன் எடையை குறைந்த காலஅளவில் எட்டிப்பிடித்துள்ளது. எடை அடிப்படையில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ள இந்த யானை, 6 டன்னுக்கு அதிக எடை கொண்ட மாஸ்டர் ‘அர்ஜுனன்’ சாதனையை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 தசராவின் போது எடைப் பரிசோதனையில், 5.3 டன்னுடன் அபிமன்யு அனைத்து யானைகளின் எடைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த முறை எடைப் பரிசோதனையில், அதன் எடை கடந்த ஆண்டை விட 60 கிலோ அதிகமாக இருந்தது.

கடந்த 9 ஆண்டுகளாக தசராவுக்கு வந்து கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த யானையான தனஞ்சய, 5,310 கிலோ எடையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதே நேரத்தில் 40 வயதுடைய கவர்ச்சிகரமான காதுகளைக் கொண்ட உயரமான யானை (2.86 மீ) ‘ஏகலவ்யா’, 5,305 கிலோ எடையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.

வனத்துறையினரின் மீட்பு மற்றும் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தப்படும் ‘அர்ஜுனன்’ யானைக்குப் பதிலாக ஸ்ரீரங்கப்பட்டண தசராவில் பங்கேற்கும் யானை ‘மகேந்திரா’ 5,120 கிலோ எடையும், ‘பிரசாந்தா’ 5,110 கிலோ எடையும் கொண்டிருந்தது.

மூன்றாவது முறையாக தசராவில் பங்கேற்கும் 26 வயதுடைய அழகான யானை ‘கஞ்சன்’ 4,880 கிலோ எடையும், பெண் யானை ‘லட்சுமி’ 3,730 கிலோ எடையும், ‘காவேரி’ 3,010 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.