ஸ்ரீ வில்லிபுத்தூர்

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநர்கர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது,.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது 2023 ஜூன் மாதம் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2- ல் நடைபெற்று வந்தது.  வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், ஈஸ்வர் சாய் தேஜூ, சதீஷ்குமார், லோகேஷ், சகாய டென்னிஸ் சரண் பாபு, பாலசுப்பிரமணியம் ஆகிய 7 பேரும் ஆஜராகினர்.

அப்போது வழக்கு விசாரணையை விருதுநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி ஜெயக்குமார், ஜூலை 14-ம் தேதி 7 பேரும் ஆஜராக உத்தரவிட்டார்.

[youtube-feed feed=1]