புல்பாரி

காணாமல் போன சிக்கிம் முன்னாள் அமைச்சர் ஆர் சி பவுடியா ஒரு கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டுளார்.

சிக்கிம் மாநிலம் இமயமலையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகூம்  இங்கு முன்னாள் மந்திரியாக இருந்த ஆர்.சி. பவுடியால் (வயது 90). பாகியோங் மாவட்டத்தின் சோட்டா சிங்தம் நகரை சேர்ந்தவர் ஆவார்.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

எனவே காவல்துறையினர் தீவிரமாக அவரை தேடி வந்தனர். தனியாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டது. இன்று புல்பாரி பகுதியில் உள்ள தீஸ்தா கால்வாயில் மிதந்து வந்த அவருடைய உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்

காவல்துறையினர் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் உடைகளை கொண்டு போலீசார் அடையாளம் கண்டனர். சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பவுடியால் அதன்பின் மாநில வனத்துறை அமைச்சரானார். அவர், ரைசிங் சன் என்ற கட்சியை தொடங்கி நடத்தினார்.

சிக்கிமுன் கலாசார மற்றும் சமூக செயல்முறைகளை பற்றி ஆழ்ந்த புரிந்துணர்வு கொண்ட அவருடைய மறைவுக்கு சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் இரங்கல் தெரிவித்து உள்ளார். காவல்துறையினர் அவருடைய மறைவு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.