Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
இந்தியா உலகம்

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகம்! குலாம் நபி ஆசாத்

May 26, 2025

ஸ்ரீநகர்: உலகெங்கிலும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகம்  என மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாநில முதல்வருமான  குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் மூலம்  பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டன, பாகிஸ்தானின் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை, ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் நமது எல்லைப் பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வேண்டுமென்றே நமது பொதுமக்களைத் தாக்கினர் என்றும் குற்றம் சாட்டினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகளிடையே பேசும்பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்தியாவின் அதிரடி நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து, இந்திய எம்.பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்று, இந்தியாவின் நிலையை விவரித்து வருகிறது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அனைத்து கட்சிகளைச்சேர்ந்ரத 7 எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணமாகி உள்ளது.

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதில் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் பரந்த போராட்டம் குறித்து சர்வதேச கூட்டாளிகளுக்கு விளக்குவதே இந்தக் குழுவின் நோக்கமாகும். சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடும் போது இந்தக் குழு நோக்கமாகும்.

இந்த நிலையில்,  பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பஹ்ரைனுக்கு வந்துள்ளது.  இந்த குழுவில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான இந்தக் குழுவில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே; பாஜக எம்பி ஃபாங்னோன் கோன்யாக்; தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பி ரேகா சர்மா; ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஓவைசி; சத்னம் சிங் சந்து எம்பி; குலாம் நபி ஆசாத்; மற்றும் தூதர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ஆகியோரும் அடங்குவர்.

இந்த குழுவினர்  பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிறகு,  அங்குள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

பஹ்ரைனுக்கு வருகை தரும் அதே அனைத்துக் கட்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் முன்னாள் இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவும் பஹ்ரைனும் வலுவான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார்.

2015 ஆம் ஆண்டு பஹ்ரைனுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில், பாதுகாப்பு குறித்து ஒரு கூட்டு உரையாடலை நிறுவ முடிவு செய்தோம். பிரதமரின் வருகையின் போது, ​​கூட்டு அறிக்கை இரு தரப்பினரிடமிருந்தும் மிகவும் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இரு தரப்பினருக்கும் இடையே வழக்கமான பரிமாற்றங்கள் உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் வலுவான அர்ப்பணிப்பு உணர்வு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

எனவே நமது சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான அந்த தொடர்பு வழிகள் தொடரும் என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக, இராஜதந்திர உறவுகள் மிக முக்கியமானவை, மேலும் அவை தொடரும். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பஹ்ரைன் எங்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்ற உணர்வை வலுப்படுத்துவதாக நான் நினைக்கிறேன்,” என்று ஷ்ரிங்லா கூறினார்.

இதுகுறித்து ANI  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த  குலாம் நபி ஆசாத், “… பஹ்ரைன் ஒரு மினி இந்தியாவாகத் தெரிவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மதத்தினரும் இங்கு வசிக்கிறார்கள். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை… எங்கள் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இங்கே நாங்கள் இந்தியர்களாக வருகிறோம்…

மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிழக்கு பாகிஸ்தான் (வங்காளதேசம்) மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை…

ஆனால் நம் நாட்டில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறோம்…

நாம் பார்த்தால், பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்…”

“பாகிஸ்தானின் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதற்கு நான் நமது ஆயுதப் படைகளை வாழ்த்துகிறேன், ஏனெனில் பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர், மேலும் சில பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் நமது எல்லைப் பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது, மேலும் அவர்கள் வேண்டுமென்றே நமது பொதுமக்களைத் தாக்கினர்.

இவ்வாறு கூறினார்.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LmdPRlBUdlFMS2w4 ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..#saibaba #omsairam
KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன்

#kas #sengottaiyan #kasengottaiyan #tnpolitics #tamilnadupolitics #tnelection2026 #assemblyelection2026 #tamilnaduelections2026 #tvkvijay #vijay #admk #edapadipalaniswamy #patrikaidotcom #tvkparty #sengottaiyanjoinstvk 

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள் 

Please leave your comment and make sure to like this video when you finish watching. 

Patrikai.com is a worldwide online news portal which provides news updates, reviews and interviews in all aspects. 

For latest online news updates and videos from all over the world subscribe : 

Youtube : https://www.youtube.com/Patrikaidotcom 
Facebook : https://www.facebook.com/patrikaidotcom 
Twitter: https://twitter.com/Patrikaidotcom 
For more news updates: http://www.Patrikai.com
KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன் #kas #sengottaiyan #kasengottaiyan
சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன? #saibaba #omsairam
Load More... Subscribe

Post navigation

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து பெருமிதம்
புடினுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்… ரஷ்யா மீதான தடைகளை அதிகரிக்க முடிவு…

Related Post

இந்தியா

இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

இந்தியா

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியா வர்த்தக செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer