சென்னை

பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி அன்று தமிழகம் வர இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தது. இதில் மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.  ஜவகர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மோடி 3 ஆவது முறை பிரதம்ராகி உள்ளார்.

பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியானது.  பிரதமர் மோடி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் சேவையை தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது தமிழக வருகையின் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.