டெல்லி

ன்று மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு 543 தொகுதிகளில். 240 இடங்கள் கிடைத்தன..

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றதால் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.  கூட்டணி கட்சிகள்ர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த அவர்கள் மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர். பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்திட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் வழங்கினர்.

பிரதமர் மோடி நேற்று முன் தினம் மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனதிபதி திரவுபதி முர்முவை சந்தித் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரினார். ஜனாதிபதி இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுகிழமை (இன்று) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டது. புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொடங்கி இருந்தன. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பல்வேறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கும் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மேலு பல்வேறு மத்திய அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.